Tuesday, April 12, 2011

மலேசியா பாலத்தை முறியடித்த அபுதாபி இணைப்பு பாலம்

உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் நிகழ்ந்த வண்ணம் உள்ளன .
விண்ணை முட்டும் கோபுரங்கள் எழுந்த  வண்ணம்  உள்ளன .இந்த வரிசையில் உலகில் மிக உயரத்தில் உள்ள இணைப்பு பாலம் என்ற பெயரை இதுவரை  மலேசியாவில் உள்ள Petronas Tower  என்ற கோபுரத்தில் உள்ள இணைப்பு கோபுரமே கொண்டிருந்தது. ஆனால் இதனை தற்போது ஐக்கிய அரபு ராச்சியத்தில்  அபுதாபியில் உள்ள nation towers என்ற இரட்டை கோபுரங்களை இணைக்கும் இணைப்பு பாலம் இந்த சாதனையை முறியடித்துள்ளது . nation tower 1 மற்றும்  nation tower 2  ஆகியவற்றின் 50 மற்றும் 54 ஆவது மாடிகளை  இணைக்கும் இணைப்பு பாலம் இந்த சாதனை பெயரை கடந்த april 10 ஆம் திகதி பெற்று கொண்டுள்ளது .

இது தரை மட்டத்தில் இருந்து 202.5 meter  உயரத்தில் அமைந்துள்ளது .இது மலேசிய பலத்தை விட 30 meter  கூடுதலான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இப்பாலத்தை தரையில் வைத்து வடிவமைத்து பின்னர் நீரியல் உயர்த்திகளை பாவித்து  உயர்த்தி பொருத்தியுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது .
கோபுரங்கள் இணைவது போல மனித மான்களும் இணைந்துகொண்டால்  தான் உயர்ந்த கோபுரங்கள் இடிக்கப் படாமல் இருக்கும்

0 comments:

Post a Comment