Sunday, July 29, 2012

மறந்தாயோ மறுத்தாயோ



கனவுகள் கூட உன் தடத்தால் நிஜமானதடி
கடந்து விட்ட நிஜம் கூட கனவானதே -நீயின்றி 

சொல்லளக்கையில் மணிகணக்கை மறந்த அந்திச்சாயல்
சொற்ப செக்கன் கூட கனக்கிறது -உன் பேச்சு இன்றி

வாழும் வரை கூட வருவேன் என்ற நீ
வாய் திறக்க மறக்கிறாயோ !மறுகிறாயோ

வெறுக்க முடியவில்லை உன்னை -என்னை நீ
வெறுக்க காரணம் சொல்லவில்லையே -உனக்கே தெரியாதா ?

விழி அயர்கையில் உன் சுவாசம் வருடும் அன்று
விதி என்று இமை மூடுகிறேன் பிரிவு என்னை வருடுகையில் இன்று !

உன் சுவாசம் கூட என்னோடு பேசும் என்றறிவாய் நீ
உன் முகம் கூட காட்ட அதனால் மறுகிறாயோ


உன்னை நான் கேட்பது என்னை மறந்தாயோ!
உண்மையை சொல்ல மறுகிறாயோ !

0 comments:

Post a Comment